web log free
May 04, 2024

“டொக்” கொடுத்துவிட்டு சிங்கபூர் செல்கிறார் கோத்தா

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, இம்மாத இறுதியில் சிங்கபூருக்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

வைத்திய பரிசோதனைகள் சிலவற்றை முன்னெடுப்பதற்காகவே, அவர் சிங்கபூருக்கு விஜயம் செய்யவுள்ளார். 

அந்த விஜயத்துக்கான சகல செலவுகளும் தன்னுடைய தனிப்பட்ட செலவிலேயே முன்னெடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர், ஜனாதிபதிகள், அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் உள்ளிட்டோர், சிங்கபூருக்கு வைத்திய சிகிச்சைகளுக்காக சென்றுள்ளனர்.

அவர்களின் சகல செலவுகளும், அரசாங்கத்தின் செலவீனத்தின் கீழே மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

எனினும், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, தனது தனி்ப்பட்ட செலவிலேயே சிங்கபூருக்கு செல்லவுள்ளார் என்பது, அங்கு இடம்பெறும் சகல செலவுகளும் அவருடைய தனிப்பட்ட பணத்திலேயே செலுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு, ஏனையோரின் தலையில் “டொக்” என கொட்டியதை போலவே இருப்பதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.