web log free
May 05, 2024

2022 வரை வாயை பூட்டினார் ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைமைத்துவம் தொடர்பில் 2022 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கோரிக்கை விடுமாறு அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழுக்கூட்டத்தில்  அறிவித்துள்ளார்.

தலைமைத்துவம் தொடர்பில் 2022,2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் கோரிக்கை விடுமாறும் ரணில் விக்கிரமசிங்க, தெரிவித்துள்ளார் என்று, அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா,எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில், நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டார். 

இதேவேளை, 2025 ஆம் ஆண்டு, தான் தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்றும் ரணில் விக்கிரமசிங்க அந்தக் கூட்டத்தில் தெரிவித்தார் என்றும், ஹர்ச டி சில்வா எம்.பி தெரிவித்தார். 

Last modified on Sunday, 19 January 2020 12:26