web log free
October 18, 2024

கொரோனாவா 071 0107107, 011 3071073 அழைக்கவும்

 

  1. கொரோனா வைரஸ் தாக்க அச்சம் காரணமாக விமான நிலையத்தில் புதிய கட்டுப்பாடுகளை விதித்தது அரசு.
  2. இனி பயணிகள் மட்டுமே விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
  3. மறு அறிவித்தல் வரை பயணிகள் தவிர வெளியார் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
  4. சீனர்களுக்கு விசேட கருமபீடம்
  5. சீனாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒன் அரைவல் வீசா வழங்குவது இடைநிறுத்தம்.
  6. இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான முதலாவது நோயாளி இனம் காணப்பட்டுள்ளார்.
  7. அதனையடுத்தே அதிரடியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
  8. சீனாவின் உபேயி பகுதியில் இருந்து நாட்டுக்கு வருகைதந்த சீன பெண் இந்த வைரஸ் தொற்றுக்குள்ளாகி உள்ளார்.
  9. மக்கள் அச்சப்படத் தேவையில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
  10. சுகாதாரப் பிரிவினரின் ஆலோசனைகளை பின்பற்றுவதன் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்ஹ கூறியுள்ளார்.
  11. “தொற்றுக்குள்ளானவர்களின் அருகிலிருந்தால் மாத்திரமே வைரஸ் பரவுவதற்கான சாத்தியமுள்ளது.
  12. சன நெரிசல் மிக்க பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கவும்.
  13. சனநெரிசல் மிக்க பகுதிகளில் முகக்கவசம் அணிய வேண்டும்.
  14. அடிக்கடி சவர்க்காரம் பயன்படுத்தி கைகளை கழுவி சுத்தமாக வைத்திருத்தல் அவசியம்.
  15. கொரோனாவா 071 0107107, 011 3071073 ஆகிய இலக்கங்களுக்கு அழைக்கவும்
Last modified on Thursday, 06 February 2020 05:19