web log free
May 04, 2024

சீனர்களுக்கு கதவடைப்பு: சுற்றுலாதுறை பாதிக்கும் அபாயம்

கொரோனா வைரஸ் சம்பந்தமாக பரவிவரும் தகவல்களையடுத்து சுற்றுலாத்துறை ஹோட்டல்கள் பலவற்றில் சீனப் பிரஜைகளுக்கு அறைகள் வழங்க மறுக்கப்படுவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.அதேபோல இலங்கை வரமுன்னர் பதிவுசெய்யப்பட்ட சீனப் பிரஜைகளின் ஹோட்டல் பதிவுகளும் இரத்துச் செய்யப்படும் நிலைமை உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் இலங்கை சுற்றுலாத்துறை பாதிப்பை எதிர்கொள்ள வேண்டியுள்ள அதேசமயம் இலங்கையில் இப்போது தங்கியுள்ள 800 ற்கு மேற்பட்ட சீன சுற்றுலாப்பயணிகள் இதனால் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் இந்த விவகாரம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள சுற்றுலாத்துறை அமைச்சின் அதிகாரியொருவர் ,சீனப் பிரஜைகள் அனைவரையும் நோயாளர்களாக பார்க்கக் கூடாதென தெரிவித்துள்ளார்.