web log free
May 02, 2024

சு.கவினருடன் பசில் மந்திராலோசனை

 

அமெரிக்கா சென்றிருந்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச இன்று காலை நாடு திரும்பினார்.

விமான நிலையத்தில் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அவரை வரவேற்றனர்.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான கட்சி நடவடிக்கைளை அவர் இவ்வாரம் முன்னெடுப்பாரென அறியமுடிந்தது.

அத்துடன், முக்கிய சந்திப்புகள் சிலவற்றில் அவர் இவ்வாறாம் ஈடுபடவுள்ளார்.

அதில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.