web log free
June 10, 2026

'மகேந்திரன் விரைவில் சிக்குவார்'


"இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை, இன்னும் இரண்டொரு வாரங்களுக்குள் இலங்கைக்கு கொண்டுவரமுடியும்" என, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்தார்.

"அர்ஜுன் மகேந்திரன் தொடர்பில், சிங்கபூர் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்றும், மகேந்திரன் இலங்கைக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன" என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd