web log free
September 08, 2024

கோத்தாவின் செயலுக்கு பொன்சேகா அதிருப்தி

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, 72ஆவது சுதந்திர தினத்தில் நடந்துகொண்ட விதம் தொடர்பில், பீல்ட் மார்ஷல் சரத் பொன்​சேகா கடுமையான அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

ஓய்வுபெற்ற இராணு அதிகாரியொருவர், தன்னால் பெற்றுக்கொண்ட வெற்றிச்சின்னங்களை, அதிகாரமளிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் மட்டுமே, அச்சின்னங்களை அணியமுடியும் என்றார்.

இராணுவ உத்தியோகபூர்வ சின்னத்தை அந்த சீருடையிலேயே அணியவேண்டும். அவற்றை சாதாரண ஆடைகளில் அணியமுடியாது.

பீசா சாப்பிடும் கடைக்கு போ​வதைப்போல​வோ அல்லது அரை கை சட்டையை அணிந்துகொண்டோ, அந்த சின்னங்களை அணியமுடியாது என்றும் அவர் மேலும் ​தெரிவித்தார்.