web log free
April 27, 2024

கோத்தா சிறைக்குச் சென்றார் - துமிந்தவை சந்தித்தாரா?

பூசா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சிறப்புக் கைதிகளில் வெலே சுதா, சூசை, கௌதம் ஆகிய மூவரும் மீண்டும் வெலிக்கடை சிறைச்சாலைக்கு நேற்று (10) மாற்றப்பட்டுள்ளனர்.

இதில், சூசை, கௌதம் ஆகிய இருவரும் வெலே சுதாவின் உதவியாளர்கள்.

இத்தகைய சிறப்புக் கைதிகளான மேற்குறிப்பிடப்பட்ட மூவரும், கடந்த சில மாதங்களுக்கு முன்னர், பூசா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர்.

இந்நிலையில், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, புதிய மெகசின் சிறைச்சாலைக்கு திடீ​ர் விஜயமொன்றை இன்றிரவு மேற்கொண்டுள்ளார்.

அவர், மரண தண்டனை கைதியான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை சந்தித்தாரா? இல்லையா? என்பது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் கருத்து பரிமாறல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதேவேளை, சர்சைக்குரிய ஒலிப்பதிவுகளை செய்தார் என்றக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவையும் ஜனாதிபதி கோத்தாபய சந்திப்பாரா என ​சமூக வலைத்தளங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

எனினும், கோத்தாபய ராஜபக்ஷ, ​மெகசின் சிறைச்சாலைக்கே சென்றிருந்தார். அவர், வெலிக்கடை சிறைச்சாலைக்கு செல்லவில்லை. துமிந்தவும் ரஞ்சனும் வெலிக்கடை சிறைச்சாலையிலேயே தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது