எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையில் உருவாகவிருக்கும் புதிய அரசியல் கூட்டணியில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் வலது கைகளுக்கு வாய்ப்புகள் குறைவாக உள்ளதாக அறியமுடிகின்றது.
விசேடமாக ரவி கருணாநாயக்க, வஜிர அபேவர்தன ஆகியோருக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்புகள் வழங்காமல் இருப்பதற்கு சஜித் அணி தீர்மானித்துள்ளது.
எனினும், அதனை முன்கூட்டியே அறிவிக்காமல், தேசியப் பட்டியலில் இடவழங்குவதாக அறிவித்துவிட்டு, பின்னர் வழங்காமல் விடுவதற்கே சஜித் அணி தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது.