ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும், அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவை கைதுசெய்யுமாறு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான், இன்று (17) இந்த பிடியாணையை பிறப்பித்தார்.
நீதிமன்றத்தில் ஆஜராகாமல், நீதிமன்றத்தை அவமதித்தார் என அவருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டது.