web log free
September 08, 2024

‘மீளப்பெறப்படுகிறது சாய்ந்தமருது வர்த்தமானி’

 

சாய்ந்தமருதுக்கு மட்டும் தனியான கவனம் செலுத்த முடியாது எனத் தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன, அந்த வர்த்தமானியை மீள பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இதே வகையான பிரச்சினைகள் இருப்பதால் சாய்ந்தமருதுக்கு மட்டும் தனியான கவனம் செலுத்தாமல் இதர விடயங்களையும் சேர்த்து ஒரு தீர்வை வழங்க அரசு தீர்மானித்துள்ளது  என அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளார்.  

இதனால் சாய்ந்தமருது நகரசபைக்காக வெளியான விசேட வர்த்தமானி மீளப்பெறப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Last modified on Monday, 02 March 2020 07:25