web log free
February 03, 2026

யானை பங்காளிகள் முரண்டு பிடிப்பு

 

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தில் பங்காளிகளாக இருந்த கட்சிகள், அடுத்து தேர்தல் தொடர்பில் இறுதி முடிவுகளை எட்டமுடியாது, திமுறுகின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், புதிய கூட்டணி அதன் சின்னம் தொடர்பில் முரண்டுபிடித்து கொண்டிருக்கின்றன என அறியமுடிகின்றது.

இதுதொடர்பில் இறுதியான தீர்மானத்தை எடுப்பதற்கு, பங்காளி கட்சிகளின் தலைவர்கள், கொழும்பில் நாளை (22) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.

பங்காளி கட்சிகள் பல, அடுத்த பொதுத் தேர்தலில், தனித்து போட்டியிடுவதாக அறிவித்திருந்தன. இதுதொடர்பிலும் நாளையதினம் கலந்துரையாடப்படும் என அறியமுடிகின்றது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd