இரண்டு நாட்கள் விஜயத்தை மேற்கொண்ட இந்தியாவுக்கு வருகைதந்திருக்கும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கும் அவருடைய பாரியாருக்கும் பிரமாண்டமான வரவேற்பளிக்கப்பட்டது.
அவர்கள் இவ்விருவரும், முக்கியமான நிகழ்வுகளில் இருநாட்களிலும் பங்கேற்கவுள்ளனர்.
அலங்கார வளைவுகள் வானத்தை எட்டிப்பிடிக்கும் அளவுக்கு வைக்கப்பட்டுள்ளன. டிரம்ப் பயணிக்கும் வீதிகளின் இரண்டு பக்கங்களிலும் பிரமாண்டமான கட் அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மோடி மற்றும் டிரம்ப ஆகியோரின் முகங்களினால் இட்டிலிகளும் தயாரிக்கப்பட்டுள்ளன. அவ்வாறான இட்டிலிகள் இந்தியாவின் தேசியக் கொடிக்கு உரிய நிறங்களில் அலங்கரிக்கப்பட்டுள்ளன.