web log free
May 02, 2024

சென்றல் பேங்கிலிருந்து மாணவன் குதித்து பலி

கொழும்பு கோட்டையிலுள்ள மத்திய வங்கியின் (சென்றல் பேங்) மாடிக்கட்டித்திலிருந்து 16 வயதான பாடசாலை மாணவன், கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அந்த வங்கியில் பணியாற்றும் உயர் அதிகாரியின் மகன் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.  

சடலம் தொடர்பிலான மரண விசாரணை, கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்னவின் முன்னிலையில் முன்னெடுக்கப்படுகின்றது.