சரியான நேரத்தில், சரியான இலக்கை நோக்கி, கழுகைப் போல, தாக்குதல் நடத்துவதற்கு தாங்கள் தயார் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
தாங்கள் அடிக்கும் அடி, கழுகு அடிக்கும் அடியாகவே இருக்கும் என்றும் தெரிவித்தார்.
பொலன்னறுவையில் நேற்று (01) இடம்பெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பொலன்னறுவையில் அரச பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளது. எனினும், பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் அந்த பயங்கரவாதம் தொடர்ந்து செயற்படமுடியாது. அதுவும் காணாமல் போகும் என்றார்.