பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மற்றுமொரு புதல்வரான யோசித்த ராஜபக்ஷவும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அம்பாறை மாவட்டத்திலேயே யோசித்த ராஜபக்ஷ போட்டியிடவுள்ளார். அதற்காக, தற்போதைய கடற்படை பதவிநிலையிலிருந்து அவர், இராஜினாமா செய்வதற்கான ஆவணங்களை அனுப்பிவைத்துள்ளார் என அறியமுடிகின்றது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தாமரை மொட்டு சின்னத்திலேயே அவர் போட்டியிடவுள்ளார் என்றும் கடற்படை பதவியிலிருந்து விலகுவதற்கு விண்ணப்பம் செய்துள்ள போதிலும் அதுதொடர்பில் உரிய பதில் இதுவரையிலும் கிடைக்கவில்லையென அறியமுடிகின்றது.