web log free
May 05, 2024

ஐ.நாவிலிருந்து விலகியது ஏன்? மஹிந்த விளக்கம்

நாடு அனைத்து துறைகளிலும் முன்னேற்றமடைய வேண்டுமாயின் ஜனாதிபதியை பிரதிநிதித்துவப்படுத்தும்  கட்சி  தலைமையிலான அரசாங்கம் தோற்றம் பெற வேண்டும். ஜனாதிபதிக்கும்  பிரதமருக்கும் இடையில் முரண்பாடான   அரசாங்கம் மீண்டும் தோற்றம் பெற்றால் முன்னைய நல்லாட்சி அரசாங்கத்தின் போட்டித் தன்மையான  சூழலே  ஏற்படும். இதனால்   எவருக் கும்  நன்மை கிடைக்காது  என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இபலோகம பிரதேசத்தில்நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற மத வழிபாட்டு  நிகழ்வில் கலந்துகொண்டு   கருத்துரைக்கையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்

மேலும் குறிப்பிடுகையில், புராதான பொருட்கள்  வரலாற்றின் அடையாளமாக  காணப்படுகின்றன. எதிர்கால சந்தத்தினர் வரலாற்று   விடயங்களையும், சின்னங்களையும் பற்றி தெரிந்துக் கொள்வது அவசியமாகும். புராதன  தொல் பொருட்களை  பாதுகாப்பது  அனைவரது பொறுப்பாகும். புராதான தொல்பொருட்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம்  உரிய  நடவடிக்கைகளை   முன்னெடுத்து  வருகின்றது.

    ஜனாதிபதி தேர்தலில்  அமோக வெற்றியினை  பெற்றுக் கொண்டோம். இன்று ஜனாதிபதி   நம்மவராக இருக்கின்றார்.  ஆனால்  பாராளுமன்றத்தில்   அரசாங்கத்திற்கு பெரும்பான்மை  பலம் கிடையாது.  புதுவருட பிறப்பினை  முன்னிட்டு மக்களுக்கு  அபிவிருத்தி  மற்றும்  நிவாரண நடவடிக்கைளை  முன்னெடுக்க    கடந்த மாதம்  பாராளுமன்றத்தில்  கணக்கு  வாக்கெடுப்பு திருத்தத்தை கொண்டு  வந்தோம். .  ஆனால்  இதற்கு  எதிர் தரப்பினர் ஆதரவு  வழங்கவில்லை. இதன்  காரணமாக அபிவிருத்தி பணிகளை தற்துணிவுடன் முன்னெடுக்க  இayhத  நிலை  ஏற்பட்டுள்ளது.

 ஜனாதிபதியும்,  அரசாங்கமும்  ஒன்றினைந்து செயற்பட்டால் மாத்திரமே  நாட்டை  கட்டியெழுப்ப முடியும்.   இரு  தரப்பினருக்குமிடையில்  வேறு பாடுகள் கட்சி மற்றும் கொள்கைகளை அடிப்படையாகக்க கொண்டு   தோற்றம் பெற்றால்  கடந்த  ஐந்து வருட கால  ஆட்சி முறைமையே  தோற்றம் பெறும் இதனால் எவ்வித பயனும்  எவருக்கும் கிடைக்கப் பெறாது. ஜனாதிபதிக்கும்  பிரதமருக்கும்  இடையில்  ஏற்பட்ட முரண்பாடுகளின்  காரணமாக  நாடு பாரிய   பின்னடைவினை  எதிர்க் கொண்டது.  இதன்  தாக்கம்    நாட்டு  மக்களையே  சென்றடைந்தது.  ஜனாதிபதி எந்த கட்சியை    சார்ந்தவராக உள்ளாரோ  அரசாங்கமும் அந்த  கட்சியை  பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும்.

புதுவருட பிறப்பு  நிறைடைந்ததை தொடர்ந்து   பாராளுமன்ற தேர்தல் இடம் பெறும்.  ஏப்ரல் 23ஆம் திகதிக்கு  பிறகு   பொதுத்தேர்தல் இடம் பெறுவதற்கான சாத்தியம்  காணப்படுகினறது. தவறுகளை  திருத்திக் கொண்டு  சிறந்த அரசாங்கத்தை அமைத்து  சிறந்த நிர்வாகத்தை முன்னெடுத்து செல்வதற்கு  திட்டமிட்டுள்ளோம்.  நாட்டுக்கு    துரிதகரமான அபிவிருத்திகளை முன்னெடுக்க வேண்டிய தேவை  காணப்படுகின்றன.

ஜெனிவாவில்  இலங்கையினை  காட்டிக் கொடுத்த  பிரேரணையில் இருந்து விலகிக் கொண்டோம். 30வருட யுத்தம்   ஒரு  இனத்திற்கு எதிராக முன்னெடுக்கவில்லை. தீவிரவாதத்திற்கு எதிராகவே  முன்னெடுக்கப்பட்டது என்பதை  புரிந்துக் கொள்ள   வேண்டும். யுத்தத்தில் தமிழ் மக்கள்  மாத்திரமல்ல  சிங்கள மக்களும்  பாரிய   விளைவுகளை  எதிர்க் கொண்டார்கள்.     

யுத்தம்  நிறைவடைந்ததை தொடர்ந்து  வடக்கு மற்றும் கிழக்கில்  துரிதமான முறையில்  அபிவிருத்தி  பணிகள் முன்னெடுக்கப்பட்டன. தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டது.   ஆனால் 2015ம் ஆண்டுக்க பிறகு  இந்த நிலைiமை  மீண்டும் தலைகீழாக மாற்றியமைக்கபபட்டன. வடக்கில்  முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திகள் அரசியல் தேவைகளுக்காக  இடை நிறுத்தம் செய்யப்பட்டன.  மத தலங்களுக்கு முப்படையினரின் பாதுகாப்புடன்  வழிபாடுகளுக்கு செல்ல வேண்டிய  அச்சுறுத்தலான சூழல்  ஏற்பட்டன.  இவ்வாறான  நிலைமையினை மீண்டும் தற்போது  சரி செய்துள்ளோம். ஆகவே  இவற்றை  நாட்டு மக்கள் மீள   நினைத்துப்  பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கின்றேன் என்றார்.