web log free
May 05, 2024

கொரோனா சந்தேகம்: 7 மாத குழந்தை அனுமதி

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தில், ஏழு மாத குழந்தை, பதுளை வைத்தியசாலையில் நேற்று முன்தினம் (03) அனுமதிக்கப்பட்டுள்ளது.

பண்டாரவளை ஹீல்ஓயா பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட மேற்படி குழந்தை, தன்னுடைய தந்தை மற்றும் தாயுடன் தென்கொரியாவிலிருந்து அண்மையில் வந்துள்ளது.

அந்த குழந்தையுடன் தாய் மற்றும் தந்தை ஆகியோரும் தனிமைப்படுத்தி தனியான வாட்டில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.