web log free
May 09, 2025

சீனப் பெண் துஷ்பிரயோகம்: மஹிந்தவின் சகா கைது

சீனப் பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், தென் மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் உறுப்பினர் ரத்தரம் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரத்தரம் என்பவரும் அவருடைய சாரதியுமே இவ்வாறு காலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

​காலி பொலிஸ் நிலையத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சீனப்பெண்​ணொருவரை, கடந்த வரும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்பது தொடர்பில் சட்ட மா அதிபரால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமையவே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தன்னை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியது தொடர்பில் முறைப்பாடு செய்த போதும் இலங்கை பொலிஸார் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒலிப்பதிவை வெ ளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd