web log free
May 09, 2025

“பேயுடன் இணைந்து ஆட்சி அமைப்பேன்” குமார்

நவ லங்கா சுதந்திரக் கட்சி என்ற புதிய அரசியல் கட்சியை இன்று கொழும்பில் ஆரம்பித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம , அழிந்து போகும் நிலையில் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகளை காப்பாற்றவே இந்த நவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் ஆசியுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கட்சி பல கூட்டணிகளை கொண்டிருக்குமென்றும் ,பண்டாரநாயக்கவின் கொள்கைகளை நிலைநிறுத்துமெனவும் குறிப்பிட்ட வெல்கம ,எந்தப் பேயுடனாவது இணைந்து நல்லதொரு ஆட்சியை அமைக்க முயற்சிகளை எடுப்பதாக கூறினார்.

” தாமரை மொட்டு கட்சியில் உள்ளவர்கள் குறிப்பாக பிரசன்ன ரணதுங்க , ரொஷான் ரணசிங்க ஆகியோர் இன்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையை பகிரங்கமாக விமர்சிக்கின்றனர்.பார்ப்பார் கேட்பார் யாருமில்லை.அந்த நிலைமை மாற வேண்டும் . எமது கட்சியை ஆரம்பித்த ஸ்தாபகர்களின் கொள்கைகளை இந்தக் கட்சியின் ஊடாக முன்னெடுப்போம்..’ என்றும் குறிப்பிட்டார் குமார் வெல்கம

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd