web log free
May 09, 2025

ரவி தலைமறைவு: தேடி வேட்டை

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, 24 மணிநேரம் கடந்துவிட்ட நிலையில், அவர் இன்னும் கைதுசெய்யப்படவில்லை.

பிடியாணை உத்தரவை, கொழும்பு பிரதான நீதவான், வௌ்ளிக்கிழமை பிறப்பித்திருந்தார்.

அந்த உத்தரவின் பின்னர், பத்தரமுல்லையிலுள்ள ரவி கருணாநாயக்கவின் வீட்டுக்கு இரகசிய பொலிஸார் சென்றிருந்தனர். எனினும், அவர் அங்கிருக்கவில்லை. அதன் பின்னர் சி.ஐ.டியினர் திரும்பி வந்துவிட்டனர்.

ரவி கருணாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரபலமான அரசியல்வாதி​யின் வீட்டில் தங்கியிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

விடுமுறை நாட்களின் கைதுசெய்தால் விளக்கமறியலில் வைப்பதற்கான இடமுண்டு. ஆகையால், விடுமுறை நாட்கள் கழியும் வரையிலும் மறைந்திருக்குமாறு அவருக்கு சட்ட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd