web log free
May 02, 2024

மொட்டுக்குள் சலசலப்பு- சு.கவினர் சிலர் ஐ.தே.கவில்...

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலர், ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுனவுடன் இணைந்ததையடுத்து, பல்வேறான நெருக்குவாரங்களுக்கு சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் முகம் கொடுப்பதாக அறியமுடிகின்றது. 

இதனால், சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் சிலர், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொள்வதற்கு கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றனர் என, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.ஹெரிசன் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த தலைவர்கள் சிலர், பல்வேறான அழுத்தங்களை சுதந்திரக் கட்சியினருக்கு கொடுத்துவருகின்றனர். இதனாலேயே மேற்கண்ட கலந்துரையாடல்களை சுதந்திரக் கட்சியினர் முன்னெடுத்துள்ளனர் என அறியமுடிகின்றது. 

ஐக்கிய தேசியக் கட்சியை பலப்படுத்துவதற்கு பல்வேறு மட்டங்களிலிருந்தும் பலரும் இணைந்துகொள்வதற்கு விரும்பம் தெரிவித்துள்ளனர். ஆகையால், குறைபாடுகளை நிவர்த்தி செய்துகொண்டு, முன்னோக்கி பயணிக்க விருப்பதாக ஹெரிசன் மேலும் தெரிவித்தார்.

Last modified on Monday, 09 March 2020 02:23