மத்தல- கதிர்காமம் வீதியில் லுணுகம்வேஹர 22ஆம் மைல்கல்லுக்கு அருகில், வேன் ஒன்று, மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளாது.
இதில், ஆறுபேர் மரணமடைந்தனர். மேலும் மூவர் காயமடைந்து கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சாரதியின் கட்டுப்பாட்டை மீறியே, அந்த வேன், வீதியோரத்திலிருந்த பாரிய மரமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.
சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் காலி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்.