web log free
May 02, 2024

கோத்தாவை எதிர்த்தார் ஹிஸ்புல்லா

பெற்றி கம்பஸில் அமைக்கப்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் சிகிச்சை முகாமை அங்கிருந்து அகற்றக்கோரி, மட்டக்களப்பில் இன்று (10) கடையடைப்பு செய்யப்பட்டுள்து.

இந்த அழைப்பு அறிவித்தலை, காத்தான்குடி நகர சபையும் காத்தான்குடி வர்த்தகர் சங்கமும் இணைந்து நேற்று வெளியிட்டுள்ளன.

இந்த அறிவித்தலையடுத்து, காத்தான்குடியில் இன்று கடைகள் யாவும் மூடப்பட்டுள்ளன.

ஜனாதிபதி கோத்தாபயவின் பணிப்பின் பேரிலேயே அந்த பல்கலைக்கழகத்தில் தடுப்பு முகாம் அமைக்கப்பட்டது.

எனினும், அந்த முடிவுக்கு, பல்கலைக்கழகத்தின் நிர்வாகி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். ஹிஸ்புல்லா கடுமையான எதிர்ப்பை தெரிவித்துவருகின்றார்.