web log free
May 09, 2025

யாழில் கொரோனா- லண்டன் பெண் அனுமதி

லண்டனிலிருந்து யாழ்ப்பாணம் கந்தர்மடம் பிரதேசத்துக்கு வந்த யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகக் கொண்ட பெண்ணொருவர், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சந்தேகத்தில் ​பேரில், இன்று (18) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கந்தர்மடத்தைச் சேர்ந்த 73 வயதான அந்த பெண், லண்டனிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு கடந்த வாரம் வருகைதந்துள்ளார்.

அந்த பெண்ணின் உடலில் ஏற்பட்ட சில மாற்றங்களால், அப்பெண்ணுக்கும் கொரோனா வைரஸ் தொற்றியிருக்கலாம் குடும்ப உறுப்பினர்கள், அவரை வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளார்.

அப்பெண்ணுக்கு ​கொரோனா தொற்றியிருக்கிறதா? இல்லையா? என்பது தொடர்பில் உறுதிப்படுத்தவில்லை என்றும், பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd