பொதுத் தேர்தல் நடைபெறுமா? நடைபெறதா? என்ற சந்தேகத்துக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. இந்நிலையில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வது, கட்டுப்பணம் செலுத்தல் ஆகியன சூடுபிடித்துள்ளன.
அதில், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ, கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார்.
தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுத்துவரும் ஐ.தே.க, யாழ்ப்பாணம் மாவட்டத்தை தவிர, வேறெந்த மாவட்டங்களிலும் தங்களுடைய வேட்பு மனுக்களை தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சஜித் அணியின் மிக வேகமான செயற்பாடுகள் காரணமாக, ஐக்கிய தேசியக் கட்சி தடுமாறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.