web log free
September 07, 2024

ராஜித, பொன்சேகாவிடம் விசாரணை

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன மற்றும் சரத் பொன்சேகா ஆகியோரிடம், கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

​கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில், மக்களை அச்சமூட்டும் வகையில் போலியான தகவல்களை பரப்பினர் என்றக் குற்றச்சாட்டின் கீழே, இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

 அவ்விருவரில், சரத் பொன்சேகா, புலனாய்வு பிரிவினால் கைதுசெய்வதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.