web log free
September 07, 2024

முழு நிர்வாணப் பெண்- வீதியில் ஆடியது ஏன்?

உடலில் ஒரு ஒட்டு துணியில்லாமல் நிர்வாணமாக வீதியில் இருந்த பெண்ணொருவரை, இளைஞர்கள் சிலர் குண்டாந்தடியால் தாக்குவதாக, சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வைரலாகி இருந்தது.

அந்த பெண் ஒரு விபசாரி என்றும், விபசாரத்தில் ஈடுபடவேண்டாம் என அவருடைய குடும்பத்தினர் கூறுவதை கேட்காமல், வீட்டுக்குள்ளோயே விபசாரம் செய்ததாக அறியமுடிகின்றது.

இதனால் கோபமடைந்த அப்பெண்ணின் கணவன் அல்லது சகோதரன், பெண்ணை நிர்வாணப்படுத்தி தாக்கியதாகவும் அதனை யாரோ, வீடியோ எடுத்து பேஸ்புக்கில் போட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கொழும்பு- தொட்டலங்க பகுதியிலேயே இவ்வாறான சம்பவம் இடம்பெற்றதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து அறியமுடிந்தது.

எனினும், அந்தப் பெண்ணை நிர்வாணப்படுத்தியது யார்? அந்த பெண் யார்? அவருடைய கணவன் என்ன செய்கிறார்? யார் தாக்கினர்? உள்ளிட்ட விபரங்கள் அம்பலமாகியுள்ளன.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கிரான்ட்பாஸ், 75ஆவது தோட்டத்தில் போதைப்பொருள் விற்பனை செய்கின்ற நபரை, போதைப்பொருளுடன் கைது செய்து, அவரை அழைத்து செல்வதற்கு, துறைமுக பொலிஸ் அதிகாரிகள் குழு முயற்சித்தது.

அப்போது, அவ்விடத்துக்கு வந்த அந்த சந்நேகநபரின் கள்ள காதலி, தன்னுடைய உடைகளை அப்படியே கலட்டி வீசிவிட்டு, முழு நிர்வாணகமாக குழுப்பங்களை விளைவித்து, மலசல நீரையும் வீசியெறிந்துள்ளார்.

இந்த சம்பவம் 16ஆம் திகதியன்றே இடம்பெற்றுள்ளது. இந்த சுற்றிவளைப்பு தேடுதலுக்கு சென்றிருந்த பொலிஸ் அதிகாரிகள் அறுவர் மீதும் மலசல நீரையும் கழிவு நீரையும் வீசியெறிந்துள்ளார்.

இந்த சம்பவம் இடம்பெற்ற அன்றையதினம்., 1030 மில்லிகிராம் போதைப்பொருளுடன் அந்த நபர் கைதுசெய்யப்பட்டார். அப்போதே, மலசலகூட நீரும், கழிவு நீரும் வீசப்பட்டுள்ளது,

அதிகாரிகள் அப்பெண்ணின் கொண்டையை பிடித்து இழுத்து, கழிவுநீர் வீச்சுவதை தடுக்க முயற்சித்தனர். எனினும், அதனை தடுக்க முடியவில்லை.

40 வயதான அந்தப் பெண், போதைப்பொருள் பாவனைக்கு கடுமையாக அடிமையானவர் என தெரியவருகிறது.

முழு நிர்வாணமாக, பேயாட்டம் ஆடிவிட்டு, பொலிஸாரின் மீது மலசல, கழிவு நீரை வீசியெறிந்த அந்த பெண், தப்பி​யோடிவிட்டார். அவரை கைது செய்வறத்கு முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என அறியமுடிகின்றது.

Last modified on Thursday, 19 March 2020 09:15