web log free
May 04, 2024

முதல் மரணத்தால் பதறுகிறது இலங்கை

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர்களில் ஒருவர் சற்றுமுன்னர் மரணமடைந்துள்ளார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் இலங்கையில் முதலாவது மரணம் இதுவாகும்.

60 வயதான இவர், மாரவில பகுதியைச் சேர்ந்தவர் என்றும் அறியமுடிகின்றது.

அவர், நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தத்துக்கு உள்ளாகி, ஏற்கெனவே சிகிச்சை பெற்றுவந்தவர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. 

அரசாங்கம், பாதுகாப்பு தரப்பினர், சுகாதார பிரிவினர் மற்றும் ஏனைய அதிகாரிகளின் ஆலோசனைகளை பின்பற்றி, மக்கள் நடந்தால், கொரோனா வைரஸ் மேலும் பரவுவதை தடுக்கமுடியும் என்று அரசாங்க தரப்பில் தெரிவிக்க்பட்டுள்ளது. 

 

Last modified on Tuesday, 31 March 2020 02:05