web log free
May 05, 2024

6க்கு 6 ஊரடங்கு தளர்த்தப்படாது

நாட்டில் அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் தொடர்பில், புதிய அறிவிப்பொன்றை ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ளது.

அதனடிப்படையில் ஆறு மாவட்டங்களில் நாளை (01) காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படாது என்று அறிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, யாழ்ப்பாணம் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம், மறு அறிவித்தல் வரையிலும் தொடரும்.

ஏனைய மாவட்டங்களில், நாளை 6 மணிக்கும் தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம் அன்று பிற்பகல் 2மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.