web log free
May 04, 2024

ஊரடங்கு மீறல்- துப்பாக்கி சூட்டில் 3 பேர் காயம்

ஊரடங்கை மீறி பயணித்தவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

மொறட்டுவை - எகொடவுயன பகுதியில் பொலிஸாரின் கட்டளையைமீறி பயணித்த வாகனம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

காயமடைந்த மூவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். காயமடைந்த மூவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.