web log free
May 09, 2025

மாத்தளை பெண் திடீரென மரணம்

மாத்தளை- நாவுல பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதான குறித்த பெண்ணின் மகன், நீர்கொழும்பிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கடமையாற்றி, 10 நாள்களுக்கு முன்னர் வருகைத் தந்துள்ளாரென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காய்ச்சல், சுவாசிப்பதில் சிரமத்தை எதிர்நோக்கிய பெண்ணொருவர் சுவசெரிய அம்பியூலன்ஸ் வண்டியில், தம்புளை வைத்தியசாலைக்குக் கொண்டுச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை இந்தப் பெண் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியா மரணமடைந்தார் என்பதை கண்டறிவதற்காக இவரது இரத்தமாதிரிகள் கண்டி வைத்தியசாலைக்கு அனுப்பப்படவுள்ளதென வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Last modified on Tuesday, 07 April 2020 08:09
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd