web log free
October 18, 2024

சீன நிறுவனத்தில் வேலை- தப்பியோடிவர் சிக்கினார்

கொழும்பு, கொம்பனிவீதியில் சீன நிறுவனமொன்றில் வேலைசெய்து கொண்டிருந்த ஹட்டனை சேர்ந்தவர், ஹட்டனுக்கு தப்பியோடி, அங்கு தலைமறைவாகியிருந்த நிலையில், பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டார்.

அவ்வாறு மறைந்திருந்த நபரை, கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பிடித்து, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனார்.

அந்த நபரை பரிசோதனைக்கு உட்படுத்திய போது, சந்தேகத்துக்கிடமான பல நோய்களுக்கான அறிகுறிகள் தென்படுகின்றன என அறியமுடிகின்றது. 

கொழும்பில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தபோது, ஹட்டனுக்கு வந்த லொறியொன்றில் ஏறியே, தப்பிசென்றுள்ளார் என அறியமுடிகின்றது. 

.