web log free
February 03, 2026

தொடர் ஊரடங்கு அறிவிப்பு

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, புத்தளம், யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலும் இரத்தினபுரி மாவட்டத்தில், நிவித்திகல பொலிஸ் பிரிவுகளில் மீள அறிவிக்கும் வரையிலும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரையிலும் தொடரும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை, ஏனைய மாவட்டங்களில், எதிர்வரும் 14ஆம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம், ஏப்ரல் 16ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.

அன்றையதினம், காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம், அன்றையதினம் மாலை 6 மணிக்கு மீளவும் அமுல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd