web log free
September 08, 2024

ராகமவில் 27 சுகாதார அதிகாரிகள் தனிமை

ராகம- வெலிசர ஆகிய வைத்தியசாலைகளில் பணியாற்றும் வைத்திய அதிகாரிகளில் 27 பேர், தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மன்னார் முழங்காவிலில் உள்ள தனிமைப்படுத்தல் முகாமிலேயே இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

ஜா-எல யில கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சிலர், இந்த வைத்தியசாலையிலேயே பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களிடமிருந்து, கொரோனா தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலேயே, வைத்திய அதிகாரிகள் 27 பேரும் தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.