இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 269ஆக அதிகரித்துள்ளது. என சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இன்று மட்டும் 15 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளமை உறுதியாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுக்கு உள்ளானவருடன் நெருங்கி பழகிய 15 பேருக்கே இவ்வாறு கொரோனா தொற்றியுள்ளது. இவர்கள், கொழும்பில் தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் ஆவர்