மகப்பேற்றுக்கு வந்திருந்த கர்ப்பிணிப் பெண்ணொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து பொரளை காசல் மகப்பேற்று மருத்துவமனை உட்பகுதியில் கிருமிநாசினி வீசும் பணிகள் இடம்பெற்றுவருகின்றன.
கொழும்பு வாழைத்தோட்ட பகுதியில் இருந்து மகப்பேற்றுக்காக சென்ற ஒருவர் வைரஸ் தொற்று இருக்கக் காணப்பட்டதையடுத்து அவர் ஐ டி எச் வைத்தியசாலைக்கு பின்னர் மாற்றப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.