web log free
September 08, 2024

8 மாணவர்களும் விடுவிப்பு

தூபியில் ஏறிப் புகைப்படங்கள் எடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் 8 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை கெப்பித்திகொல்லாவ நீதிமன்ற நீதவான் எச்.கே.மாலிந்த ஹர்சன த அல்விஸ் இன்று பிறப்பித்தார்.

ஹொரவ்பொத்தான, கிரலாகல பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தென் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

மூன்று குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இவற்றில், முதலாம் இரண்டாம் குற்றச்சாட்டுகளுக்கு தலா 1,000 ரூபாய் அபராதம் செலுத்துமாறும் மூன்றாவது குற்றச்சாட்டுக்கு தலா 50,000 ரூபாய் அபராதம் செலுத்துமாறும், நீதவான் உத்தரவிட்டுள்ளார்.