web log free
September 04, 2025

10 நாட்களுக்கு ஊரடங்கு நீடிப்பு

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் சிலாபம் ஆகிய மாவட்டங்களை தவிர, ஏனைய மாவட்டங்களில் தற்போது அமுல்படுத்தப்பட்டு கொண்டிருக்கும் ஊரடங்கு சட்டம், 11ஆம் திகதி காலை 5 மணிவரையிலும் தொடர்ந்து நீடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் அவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அன்றாட வாழ்க்கை முறைமை மற்றும் நிறுவனங்களின் செயற்பாடுகள், 11 ஆம் திகதியிலிருந்து வழமைக்கு திரும்பும் என்றும் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

Last modified on Sunday, 03 May 2020 22:23
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd