web log free
May 09, 2025

முள்ளிப்பொத்தானை விபத்தில் சாரதிக்கு காயம்


எப்.முபாரக்

திருகோணமலை, தம்பலாகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை 95ஆம் கட்டைப் பகுதியில் டிப்பர் ரக வாகனமொன்றும், லொறியொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் லொறியின் சாரதி பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளார் என தம்பலாகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்துச் சம்பவம் இன்று (8) காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலையிலிருந்து சீமேந்துகளை ஏற்றிச் சென்ற லொறியொன்றும், கந்தளாயிலிருந்து கப்பல்துறை பகுதிக்குச் சென்ற டிப்பர் வாகனமுமே இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலாகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd