web log free
April 19, 2024

கொக்கேய்னுடன் இந்திய பிரஜை கைது

கொக்கேய்ன் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஒரு கிலோகிராம் கொக்கேய்ன் போதைப்பொருளுடன் 34 வயதான இந்திய பிரஜையொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டபோதைப்பொருள் 15 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியானது என, பொலிஸார் கூறியுள்ளனர்.