web log free
April 23, 2024

இந்தியாவுக்கு பயணமானார் மஹிந்த

எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச இந்தியாவுக்குப் பயணமாகியுள்ளார்.

பெங்களூர் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றவே மகிந்த ராஜபக்ச அங்கு சென்றுள்ளார்.

நாளை வரை நடைபெறவுள்ள இந்தக் கருத்தரங்கில், மகிந்த ராஜபக்ச, இந்திய- இலங்கை உறவுகளின் எதிர்காலம் என்ற தலைப்பில் இன்று உரையாற்றவுள்ளார்.

மகிந்த ராஜபக்சவுடன், நாமல் ராஜபக்ச, லொகான் ரத்வத்த, டிலான் பெரேரா, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் உள்ளிட்ட பலரும் பெங்களூர் சென்றுள்ளனர்.

Last modified on Wednesday, 11 September 2019 01:39