web log free
April 18, 2024

தண்ணீர் போத்தல் கொண்டுச் செல்ல தடை


பாராளுமன்றத்துக்குள் தண்ணீர் போத்தல் கொண்டுச் செல்வதற்கு, நேற்று (8) முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காகவே இந்த நடைமுறை பின்பற்றப்பட்டதாக, பாராளுமன்ற அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்துக்கு வருகின்ற விருந்தாளிகள், பாராளுமன்றத்தில் சேவையாற்றுகின்ற சேவையாளர்கள் உள்ளிட்ட எவருமே, தண்ணீர் போத்தல்களை எடுத்துவரமுடியாது.

இதேவேளை, பாராளுமன்றத்தில் தண்ணீர் பருகக்கூடிய ஒவ்வொரு இடங்களிலும் குடிதண்ணீருக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆகையால், வெளியிலிருந்து தண்ணீர் போத்தல்களை கொண்டுவரவேண்டிய தேவையில்லை என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.