web log free
September 03, 2025

தேயிலை ஏற்றுமதி வரி இடைநிறுத்தம்

” பதிவுசெய்யப்பட்ட தேயிலை ஏற்றுமதியாளர்களிடமிருந்து ஒரு கிலோவுக்கு அறவிடப்படுகின்ற 3.50 ரூபா, ஏற்றுமதி வரியை 6 மாதங்களுக்கு இடைநிறுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.” – என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.

இதன்போதே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.

தேயிலை ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நோக்கில் பிரசாரம் முன்னெடுப்பதற்காகவே தேயிலை சபையால் இவ்வரி அறவிடப்பட்டுவந்தது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd