web log free
July 01, 2025

கொழும்பு பெண்ணுக்கு கொரோனா-2ஆவது அலையென அச்சம்

கொழும்பிலுள்ள பெண்ணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை இனங்காணப்பட்டமை அடுத்து பெரும் பதற்றம் நிலவியது.

கொழும்பு ஜிந்துப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கே, கொரோனா தொற்றியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அப்பெண்ணுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மூன்று தடவைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போதெல்லாம் எவ்விதமான அறிகுறியும் தென்படவில்லை.

இந்நிலையில், நான்காவது தடவை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே அப்பெண்ணுக்கு கொரோனா தொற்றியுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது. 

Last modified on Friday, 31 July 2020 03:05
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd