web log free
May 09, 2025

துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண் படுகாயம்

கொழும்பு கொட்டாஞ்சேனை - மெல்வத்த - மைத்ரிபோதி மாவத்தையில் பெண் ஒருவர் மீது துப்பாக்கித் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

உந்துருளியில் பயணித்த இருவரினால் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த குறித்த பெண், தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர் மாகாந்துரே மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்ட கஞ்சிபான இம்ரானின் மற்றுமொரு மனைவி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last modified on Wednesday, 11 September 2019 01:39
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd