web log free
February 06, 2026

நாயுடன் சென்றவருக்கு அபராதம்

நுவரெலியா – ஹோட்டன் சமவெளிக்குள் தனது வளர்ப்பு நாயைக் கூட்டிச் சென்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட இருவருக்கு 60,000 ரூபாய் அபராதம் விதித்து நுவரெலியா நீதிவான் பமோத ஜயசேகர இன்று (23) உத்தரவிட்டுள்ளார்.

பண்டாரவளை பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண்ணொருவருக்கே இவ்வாறு அபராதத் தொகை அறவிடப்பட்டுள்ளது.

இதில் ஒருவரை 20,000 ரூபாயும் மற்றையவரை 40,000 ரூபாயும் செலுத்துமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd