web log free
April 20, 2024

மார்ச் 8இல் ஐ.நா அறிக்கை

இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள, ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மார்ச் 8ஆம் திகதி வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணிய வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்த அறிக்கை இன்னமும் இறுதி செய்யப்படவில்லை என்றும், எனினும், மார்ச் 8ஆம் திகதி நண்பகல் அது வெளியிடப்படும் வாய்ப்புள்ளதாகவும், அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

இந்த அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்படுவதற்கு முன்னதாக, இலங்கை அரசாங்கத்துக்கு அதன் பிரதி ஒன்று வழங்கப்படும். அறிக்கையை ஆராய்ந்து பதிலளிப்பதற்கு வசதியாகவே இலங்கை அரசாங்கத்துக்கு முன்கூட்டியே பிரதி ஒன்று வழங்கப்படவுள்ளது.