web log free
February 02, 2026

மஹிந்த முதன்முறையாக வாக்களித்தார்

கொரோனா தொற்றால் வாக்களிக்கச் செல்ல அச்சம் கொண்டுள்ள வாக்காளர்களின் அச்சத்தைப் போக்குவதற்காக, அவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பதற்கு, தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர், மஹிந்த தேசப்பிரிய இன்று வாக்களிப்பில் கலந்துகொண்டார்.

மஹிந்த தேசப்பிரிய பம்பலப்பிட்டி- லிண்டிசே மகளிர் கல்லூரிக்கு இன்று காலை சென்று, வாக்களித்துள்ளார்.

தான் ஒரு வாக்காளராக 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு இன்று வாக்களித்துள்ளாகத் தெரிவித்துள்ள அவர், அச்சமின்றி அனைவரையும் வாக்களிப்பில் கலந்துகொள்ள செய்வதற்காகவே, தான் இன்று வாக்களித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd