web log free
July 02, 2025

கட்சி கைகலப்பில் 4 பேருக்கு காயம்

இரு கட்சிகளின் ஆதரவாளர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, மீராவோடை பகுதியில் வைத்து இரு அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களுக்கிடையே நேற்று மாலை (5)  இம்மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தடிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்ட இச்சம்பவத்தில் நால்வர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் அதில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd